அரசு உதவி பெறும் கலைக் கல்லூரியில் முன்னாள் பேராசிரியைகள் சந்திப்பு

X
Komarapalayam King 24x7 |27 July 2025 8:04 PM ISTகுமாரபாளையம் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரியில் முன்னாள் பேராசிரியைகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
குமாரபாளையம் அரசு உதவி பெறும் ஜே.கே.கே. நடராஜா கலை அறிவியல் கல்லூரியில் 50ம் ஆண்டு பொன்விழாவையொட்டி முன்னாள் பேராசிரியைகள் சந்திப்பு நிகழ்ச்சி முதல்வர் நளினி தலைமையில் நடந்தது. தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, குத்துவிளக்கேற்றி வைத்து, முன்னாள் பேராசிரியைகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினர். முன்னாள் பேராசிரியைகள் தங்கள் பணி காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசினார்கள். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியை ஆங்கிலத் துறை பேராசிரியை சுமதி, வேதியியல் துறை உதவி பேராசிரியை கலைச்செல்வி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
Next Story
