திமுக - காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்

X
காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவரும் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு தலைவருமான தங்கபாலு நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்தார். குழித்துறையில் உள்ள குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்தார் பின் நிருபர்களிடம் கூறியதாவது:- காங் வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட சொத்துகளை பாதுகாக்க, பராமரிக்க, மீட்டு எடுக்க, நாங்கள் இணைந்து ஒரு குழு அமைத்துள்ளோம். இதற்காக இந்த மாவட்டத்திற்கு வந்துள்ளோம். தமிழக முழுவதும் கோடி கணக்கில் சொத்து உள்ளது. 95 சதவீதம் சொத்து காங்கிரசிடம் வந்துவிட்டது. 5 சதவீதம் சொத்து மிக விரைவில் வரவுள்ளது. தமிழகத்தில் காங். திமுக கூட்டணி 20 ஆண்டாக வெற்றி கூட்டணியாக உள்ளது. விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சு என்பது கூட்டணி கணக்கு போடத்தான் செய்வார்கள். அதை நாங்கள் ஆதரிக்கவும் மாட்டோம், எதிர்க்கவும் மாட்டோம். அடுத்த ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். காமராஜருக்கு எதிராக யார் பேசினாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இது தொடர்பாக பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். தமிழக தலைவர் செல்வ பெருந்தகை தமிழக முதல்வரை சந்தித்து பேசி இதற்கு முதல்வர் வருத்தம் தெரிவித்துள்ளார். என கூறினார் பேட்டியின் போது குமரி மேற்கு மாவட்ட காங். கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால் சிங், எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் , ரூபி மனோகரன் , ராபர்ட் ப்ரூஸ் எம்.பி உட்பட பலர் உடன் இருந்தனர்.
Next Story

