பொள்ளாச்சியில் அரசு பஸ்சின் கதவு பறந்ததால் பரபரப்பு!

பொள்ளாச்சியில் அரசு பஸ்சின் கதவு பறந்ததால் பரபரப்பு!
X
அரசு பஸ்சின் பின்புற தானியங்கி கதவு திடீரென கழன்று காற்றில் பறந்து கீழே விழுந்தது.
பொள்ளாச்சி அருகே கொங்கலப்பம்பாளையம் பகுதியில் நேற்று அரசு பஸ்சின் பின்புற தானியங்கி கதவு திடீரென கழன்று காற்றில் பறந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பெண்கள் அதிர்ச்சியில் அலறினர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர். பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனே பஸ் டிரைவர் வாகனத்தை நிறுத்தி, கண்டக்டருடன் சேர்ந்து கதவை எடுத்து வைத்துவிட்டு பஸ்ஸை தொடர்ந்தார். இந்த சம்பவம் பொதுமக்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story