சேலம் வழிப்பறி வழக்கில் கோர்ட்டு பிடிவாரண்டு:

சேலம் வழிப்பறி வழக்கில் கோர்ட்டு பிடிவாரண்டு:
X
தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
சேலம் குகை கருங்கல்பட்டியை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஒரு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்தவர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனிடையே, கடந்த 25-ந் தேதி மணிகண்டனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சேலம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவரை செவ்வாய்பேட்டை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், மணிகண்டன் நேற்று அவரது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
Next Story