நலத்திட்ட உதவிகளை வழங்கிய திமுக மகளிரணியினர்
மதுரை திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம் வலையப்பட்டி பகுதியில் திமுக அரசின் சாதனைகளையும், மகளிர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு அரசு செய்த திட்டங்களை பொதுமக்களிடம் விளக்க கூட்டம் நேற்று (ஜூலை.27) நடைபெற்றது. இதில் வளையங்குளம் ஊராட்சியில் உள்ள 700 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மதுரை தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா தங்கபாண்டி அவர்கள் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவகாசி வனராஜா , திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வேட்டையன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




