ஓசூர் அருகே குட்கா கடத்தல் டிரைவர் உட்பட இருவர் கைது.

X
கிருஷ்ணகிரி ஓசூர் அடுத்த ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நேற்று சிப்காட் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்த பீரோவை சோதனை செய்தில் அதில் 710 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில் துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த டிரைவர் மலையரசன்(36) சரவணகுமார்(30) ஆகிய 2 பேரைபோலீசார் கைது செய்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story

