லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது

X
Komarapalayam King 24x7 |28 July 2025 9:30 PM ISTகுமாரபாளையத்தில் லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ். நடராஜன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். காவேரி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்று மாலை 05:00 மணியளவில் நேரில் சென்ற போலீசார், வெளி மாநில லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசன், 57, என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
