கொடி நாள் வசூலில் சாதனை- அதிகாரிகளை பாராட்டிய ஆட்சியர்!

கொடி நாள் வசூலில் சாதனை- அதிகாரிகளை பாராட்டிய ஆட்சியர்!
X
வேலூரில் கொடி நாள் நிதி ரூபாய் 3 லட்சத்திற்கு மேல் வசூல் புரிந்த அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 28) நடந்த நிகழ்ச்சியில் 2022 ஆம் ஆண்டில் கொடி நாள் நிதி ரூபாய் 3 லட்சத்திற்கு மேல் வசூல் புரிந்த அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) கௌசல்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story