ராமநாதபுரம் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பொந்தம் புளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ வாழவந்தாள் அம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது சிறிய மாடு வண்டி பந்தயத்தில் 13 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 32 மாட்டு வண்டிகளும் என மொத்தம் 45 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளுக்கும், மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்று ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்றன. இந்த மாட்டு வண்டி போட்டியை பொதுமக்கள் சாலையின் இருபுறங்களும் நின்று மாட்டுவண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
Next Story

