ஜெயங்கொண்டத்தில் பெண்ணின் செல்போனை பிடுங்கி உடைத்து எறிந்த மண்டல துணை தாசில்தார் மீது காவல் நிலையத்தில் புகார்
அரியலூர், ஜூலை.29- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி இவர் தற்பொழுது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார் இந்நிலையில் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் ரேணுகாதேவி கடந்த 18ஆம் தேதி மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் தனக்கு சொந்தமான சர்வே எண் 433/11 சார்ந்த நிலத்தில் 50 ஆண்டுகளாக உரிமையுடன் வைத்திருக்கிறோம் இதில் நிலத்திற்கு உரிய பட்டா எண் 8538 எங்களது பெயரில் நீண்ட காலமாக உள்ளது இந்த நிலம் சம்பந்தமாக தற்போது நீதிமன்ற வழக்கு நடைபெற்று வருகிறது இந்நிலையில் தங்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் சட்டப்படி நோட்டீஸும் வழங்காமல் சில நபர்களின் பெயர்களை பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிந்து கொண்டோம் பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்களை நீக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார் அப்போது நான் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாசில்தாரிடம் வாக்குவாதம் செய்து தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் அப்பொழுது பணியில் இருந்த மண்டல துணை தாசில்தார் அவரிடம் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் ரேணுகா தேவியின் செல்போனை பிடுங்கி உடைத்து எறிந்ததாக கூறப்படுகிறது இதில் 40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது இது குறித்து ரேணுகாதேவி புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர் மேலும் உடைத்த செல்போனை செல்போன் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு போலீசார் அறிவுருத்தியத்தன் பேரில் செல்போன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது தனக்கு நியாயம் கேட்டு ரேணுகாதேவி தாலுக்கா அலுவலகத்தில் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story



