கலவை அருகே மீன் பிடிக்க சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

கலவை அருகே மீன் பிடிக்க சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
X
மீன் பிடிக்க சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
கலவை அருகே பென்னகர் பள்ள காலனி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் செல்வம் (வயது 30). இவர் நேற்று காலை மீன் பிடிப்பதற்காக சென்றார். அப்போது நீரில் இருந்து மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வாழைப்பந்தல் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story