கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

X
தஞ்சாவூா் அருகே பஞ்சநதி கோட்டையில் திங்கள்கிழமை இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் அருகே பஞ்சநதிக்கோட்டை வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சங்கா். இவா் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மனைவி கவிதா (29). இவா் தனது தாய் மற்றும் தங்கைகளுடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில் திங்கள் நள்ளிரவு, காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து கவிதா மற்றும் அவரது குடும்பத்தினா் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா், கவிதா அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இது குறித்து தாலுகா காவல் நிலையத்தில் கவிதா புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story

