கிறிஸ்தவ ஆலய புணரமைப்புக்கு மானியம் – கலெக்டர் பவன்குமார் அறிவிப்பு

X
கோவை மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களை புனரமைக்கும் பணிகளுக்காக அரசு மானியம் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த கட்டிடங்களில் இயங்கும் ஆலயங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும். ஆலயத்தின் வயதினைப் பொருத்து ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மானியம் கிடைக்கும். பீடம், கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட கூடுதல் பணிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Next Story

