ஜெயங்கொண்டம், தா.பழூர், தழுதாழைமேடு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை

X
அரியலூர், ஆக.1- ஜெயங்கொண்டம், தா.பழூர், தழுதாழைமேடு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ஜெயங்கொண்டம், தா பழூர்,தழுதாழை மேடு உள்ளிட்ட துணை மின் நிலையம் மற்றும் துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பணி நாளை 02.08.2025 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், தண்டலை, மேலூர், வட வீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியபாளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், பிச்சனூர், வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், சூரியமணல், சிலால், தேவமங்கலம், வானதிரையன் பட்டினம், அங்கராயநல்லூர், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், தா.பழூர், சோழமாதேவி, தென்கச்சி பெருமாள் நத்தம், நாயகனைபிரியாள், காடுவெட்டாங்குறிச்சி, பொற்பதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவன்நல்லூர், இடைக்கட்டு, வடக்கு மற்றும் தெற்கு ஆய்தகளம், தழுதாழை மேடு, வீரசோழபுரம், மெய்க்காவல் புத்தூர் மற்றும் துணை மின் நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள கிராம பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என அவர் அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Next Story

