போலீசாரின் போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சார கூட்டம்
மதுரை சேதுபதி உயர்நிலை பள்ளியில் இன்று ( ஆக.1) மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக போக்குவரத்து மற்றும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன்.. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன், பள்ளி நிர்வாகிகள்..உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.. இதில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் செல்லும் பொழுது செய்யக்கூடியவைகள் செய்யக்கூடாதவைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.. பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று கொண்டோ தொங்கிக் கொண்டோ செல்வதனால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் விபரீதங்கள் குறித்தும் உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தனர்... இறுதியில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போக்குவரத்து விதிகளை தினசரி பின்பற்றி வரும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் புத்தகத்தை ஆய்வாளர் தங்கமணி வழங்கி பாராட்டினார்.
Next Story




