அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் சூர்யா (வயது 21). இவர் சம்பவத்தன்று எருமாபாளையம் ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பலுக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த கும்பல் அவரை தாக்கினர். இதில் காயம் அடைந்த சூர்யா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சேலம் டி.எம்.எஸ். செட் பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் ஹரி (21) என்பவரை கைது செய்தனர்.
Next Story