மேலப்பாளையத்தில் ரத்தக்கொடையாளர்கள் சேர்க்கை முகாம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி சார்பாக மேலப்பாளையம் 50வது வார்டில் ரத்த கொடையாளர்கள் சேர்க்கை முகாம் மாவட்ட தலைவர் போத்தீஸ் முகமது பாபு, மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களது பெயர் மற்றும் ரத்த வகைகளை பதிவு செய்தனர்.இதில் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story