புதிய சமுதாயகூடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா, எம் எல் ஏ பங்கேற்பு

X
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமையூர் ஊராட்சியில், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 96 லட்ச மதிப்பீட்டில் புதிய சமுதாயகூடம் கட்டுவதற்காக நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் K.P. ராஜன், காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நகர கழக செயலாளர் ச.நரேந்திரன், மேல மையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹெலன் சிந்தியா சரவணன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள், அவைத்தலைவர் திருமலை, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

