அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா

அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா
X
அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மாவரம் ஊராட்சியில் 15 -வது நிதிக்குழு நிதியிலிருந்து 45 இலட்ச மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமையவுள்ள அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய குழு துணை தலைவர் A.V.M. இளங்கோவன், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்,ஒன்றிய கவுன்சிலர் அருள்தேவி,வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், மற்றும் மருத்துவர்,மருத்துவ அலுவலர்கள்,உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,கழக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
Next Story