எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
X
எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்,மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிக்கு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தின் தொடர்ச்சியாக வருகின்ற ஆகஸ்ட் 22-ஆம் தேதி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தருவதையொட்டி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி மற்றும் செய்யூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகளின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் தலைமையிலும்,மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் முன்னிலையிலும் நடைபெற்றது.. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதியை சார்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள், செயலாளர்கள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story