அரசுப் பள்ளியின் அருகே ஆபத்தான நிலையில் பள்ளம்

கழிவுநீர் கால்வாயில் மீண்டும் சிலாப் மூடி கொண்டு மூடப்படாமல் திறந்த நிலையிலே காணப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு நலன்கள் கருதி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் அருகே அரசு பள்ளி முன் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நீண்ட நாட்களாக திறந்த நிலையில் காணப்படும் ஊராட்சி கழிவு நீர் கால்வாயின் சிலாப் மூடி . பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நுழைவு வாயில் பகுதியிவ் ஒரு கழிவுநீர் கால்வாய் உள்ளது . பள்ளி மாணவர்கள் நலன்கள் கருதி சிமெண்டாலான சீலாப் மூடி கொண்டு கழிவுநீர் கால்வாய் மூடப்பட்டுள்ளது. பல நாட்களுக்கு முன்பு ஊராட்சி பணியாளர்கள் சீதாப் மூடியை திறந்து உரிய பணியை மேற்கொண்டனர். கழிவுநீர் கால்வாயில் மீண்டும் சிலாப் மூடி கொண்டு மூடப்படாமல் திறந்த நிலையிலே காணப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு நலன்கள் கருதி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story