ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் திருவிழா புஷ்ப யாகத்துடன் நிறைவு*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் திருவிழா புஷ்ப யாகத்துடன் நிறைவு 108 திவ்ய தேசங்களில் சிறப்புமிக்க விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் அவதார உற்சவமான ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஜூலை 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பெரியாழ்வார் மங்களா சாசனம், 5 கருட சேவை, சயன சேவை, பூப்பல்லக்கு உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் ஜூலை 28ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. 12-ம் நாள் விழாவான வியாழக்கிழமை இரவு ஆண்டாள் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி குறடு மண்டபத்தில் எழுந்துள்ளனர். அங்கு யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, புஷ்ப யாகத்துடன் ஆடிப்புர தேரோட்ட திருவிழா நிறைவு பெற்றது.
Next Story

