சேவை செய்யும் மகளிர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

X
Komarapalayam King 24x7 |4 Aug 2025 4:33 PM ISTசேவை செய்யும் மகளிர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தது.
சேவை செய்யும் மகளிர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா கோவை யூனிக் பொதுநல அமைப்பின் சார்பில் நிறுவனர் முத்துமாரி தலைமையில் நடந்தது. ரத்த தேவைக்கு உதவுதல், உடல் உறுப்பு தானம் பெற வைத்தல், கண் தானம் செய்தல், மருத்துவ உதவி, கல்வி உதவிக்கு உதவி செய்தல், ஆதார், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல், பெயர் திருத்தும் செய்ய உதவுதல், மருத்துவ காப்பீடு மூலம் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய உதவுதல்,வடிகால் பராமரிப்பு சாலை வசதி மேம்படுத்துதல், பேருந்துகள் இல்லாத பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்து வரும் குமாரபாளையம் சமூக ஆர்வலர் சித்ராவின் சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. மேலும் மதுரை,பாண்டிச்சேரி, தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு,சேலம்,நாமக்கல், சென்னை, தஞ்சை, கும்பகோணம் பகுதியில் உள்ள 500 மகளிர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
Next Story
