நள்ளிரவில் உணவுக்காக உலா வந்த காட்டு யானை: வனப் பகுதிக்குள் விரட்டிய வனத்துறையினர்!

நள்ளிரவில் உணவுக்காக உலா வந்த காட்டு யானை: வனப் பகுதிக்குள் விரட்டிய வனத்துறையினர்!
X
கோவை தொண்டாமுத்தூர் அருகே பொம்மனம்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஒரு ஒற்றை காட்டு யானை தோட்டத்திற்கு புகுந்ததால் விவசாயிகள் அச்சமடைந்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே பொம்மனம்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஒரு ஒற்றை காட்டு யானை தோட்டத்திற்கு புகுந்ததால் விவசாயிகள் அச்சமடைந்தனர். யானையின் வருகை கண்காணிப்பு கேமராவில் பதிவாக, தகவல் பெற்ற வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை சோகமாக நடந்துசெல்வது போன்று காணப்பட்டது. இச்சம்பவத்தில் எந்தவித சேதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, யானையின் இயக்கம் கண்காணிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நினைவூட்டத்தக்கது. அடிக்கடி யானைகள் வருகின்றதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். யானைகள் வருவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
Next Story