திருப்பத்தூரில் காவல் ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் காவல் ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப் படையில் வேலூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது உடன் இருந்த காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆய்வாளர் கணேஷ் பாபு இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Next Story

