மீன்பிடி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

X
குமரி மாவட்டம் குழித்துறை அடுத்த பழவாறு பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவர் சேவியர் (64). இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியாகும். இவருக்கு வாதம் உள்ளிட்ட நோய்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சேவியர் நேற்று வீட்டு பக்க சுவர் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் இது குறித்து களியக்காவிளை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

