உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்   க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!
X
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவாதூர், முன்னுத்திக்குப்பம் ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார், ஜோதிலிங்கம் ஆகிய தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்.எல்.ஏ, ஒன்றிய கழக செயலாளர் பொன்சிவகுமார், ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். இந்த முகாமில் வருவாய்த்துற, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15- க்கு மேற்பட்ட துறைகள் மூலம் 46 வகையான சேவை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது இதில் சுமார் 1000- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story