கொசுவர்த்தியால் தீவிபத்து பெண் பலி: கணவர் காயம்!

கொசுவர்த்தியால் தீவிபத்து பெண் பலி: கணவர் காயம்!
X
கொசுவர்த்தியால் தீவிபத்து பெண் பலி: கணவர் காயம்!
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறையடுத்த வில்லிசேரியில் உள்ள குமரன் தெருவைச் சேர்ந்த அய்யனார் மகன் செல்வராஜ் (54). விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள், மகள் கௌசல்யா. இவர்கள் கடந்த ஜூன் 13ஆம் தேதி கொசுவர்த்தியைப் பற்றவைத்துவிட்டு, வீட்டுக் கதவைத் திறந்து வைத்து தூங்கினராம். அப்போது, காற்று காரணமாக, கொசுவர்த்தியின் தீப்பொறி அருகேயுள்ள சாக்கில் விழுந்து தீப்பற்றி, மாரியம்மாளின் சேலையிலும் தீப்பிடித்ததாம். இதில், அவரும், காப்பாற்ற முயன்ற செல்வராஜூம் காயமடைந்தனர். அவர்களை மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மாரியம்மாள் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story