கிருஷ்ணகிரி:வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து முகாம்

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் 07.08.2025 அன்று, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) கிருஷ்ணகிரி அலுவலகத்தில் காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் விவசாயிகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களுடனும் அலுவலர்களுடனும் கலந்து உரையாடலாம். என ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்தார்.
Next Story

