சாலை மறியலில் ஈடுபட விவசாயிகள் முடிவு

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் 58 கிராம பாசன கால்வாயில் பயன் பெறும் கண்மாயை சேர்ந்த 35 கண்மாய் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வைகைஅணையில் தற்பொழுது முழுக்கொள்ளவை எட்டியுள்ள சூழ்நிலையில் 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி கடந்த வாரத்தில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடமும், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்தும் தண்ணீர் திறக்ககோரி மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் சங்கத்தின் சார்பாகவும் அனைத்துகட்சிகள் மற்றும் உசிலம்பட்டியில் உள்ள சங்கங்கள் சார்பாகவும் வருகின்ற எட்டாம் தேதி உசிலம்பட்டி தேவர்சிலை சிலை அருகில் பஸ் மறியல் செய்வதென ஏகமனதாக முடிவெடிக்கப்பட்டது.
Next Story

