மலேசியாவில் இறந்த குன்னத்தைச் சேர்ந்த நபரின் உடல் குன்னத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.

மலேசியாவில் இறந்த குன்னத்தைச் சேர்ந்த நபரின் உடல்  குன்னத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.
X
மனு கொடுத்த உடனே இங்கிருந்து நடவடிக்கை எடுத்த அமைச்சரும் மாவட்ட ஆட்சியருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
மலேசியாவில் இறந்த குன்னத்தைச் சேர்ந்த நபரின் உடல் குன்னத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது : பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், காமராஜர் நகர், வடக்கலூர் கிராமத்தைச்சேர்ந்த ரமேஷ் என்பவர் மலேசியா நாட்டில் சிலான்கூர் என்ற இடத்தில் உள்ள உணவகத்தில் வேலைசெய்து வந்தார் என்றும், கடந்த 02.08.2025 அன்று மதியம் இறந்துவிட்டதாகவும், தனது கணவரின் உடலை கொண்டு வருதற்கு 5லட்சம் ரூபாய் பணம் கேட்பதாகவும், தனது கணவரின் வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்துவதாகவும், வறுமையான நிலையில் அவ்வளவு பணம் இல்லை எனவே, தனது கணவர் உடலை மீட்டு இந்தியா கொண்டுவருமாறு அவரின் மனைவி திருமதி காவேரி என்பவரும், இறந்தவரின் தாயாரும் கடந்த 03.08.2025 அன்று மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். 04.05.2025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமும், கோரிக்கை வைத்தனர். *இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் 04.08.2025 அன்று அயல்நாட்டினர் துறையின் அரசு செயலாளர் அவர்களுக்கும், அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் அவர்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுத்ததால், ரமேஷ் அவர்களின் உடல் மீட்கப்பட்டு மலேசியா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் கொண்டுவரப்படும் அவரது உடல் 06.8.2025 இரவு 11.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். (7.8.2025) அதிகாலை 2.30 மணியளவில் குன்னத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டுவரப்பட்டது.
Next Story