முன்னாள் முதலமைச்சர் வருகை, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்

முன்னாள் முதலமைச்சர் வருகை, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
X
முன்னாள் முதலமைச்சர் வருகை, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தின் தொடர்ச்சியாக வருகின்ற ஆகஸ்ட் 22-ஆம் தேதி வருகை தருவதையொட்டி மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியத்தில் ஊராட்சி வாரியாக கடமலைப்புத்தூர் முதல் கரிசங்கால் வரை மொத்தம் 14 ஊராட்சிகளில் நடைபெற்ற கிளை கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஆனந்தமங்கலம் P.சுப்பிரமணி,அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர்.ரங்கராஜன், அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் சந்திரபாபு ஒன்றிய, கழக நிர்வாகிகள், செயலாளர்கள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
Next Story