ராணிப்பேட்டையில் நாளை பொது வினியோகத் திட்ட முகாம்!

X
பொது வினியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரி செய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும். இதுதவிர பொது வினியோகத் திட்டம் தொடர்பான குறைகளை தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட் டம் 2019-ம் படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்கு உரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story

