பசுமலை பள்ளியில் போலீசாரின் விழிப்புணர்வு பிரச்சாரம்.
மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை பசுமலை C.S.I தொழிற்பயிற்சி பள்ளியிலும், முத்துப்பட்டி எவர்கிரீன் வித்யாலயம் CBSC பள்ளியிலும் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 223-வது & 224வது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் இறுதியில் காவல்துறையினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் என அனைவரும் போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
Next Story



