உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த எம் எல் ஏ

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த எம் எல் ஏ
X
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த எம் எல் ஏ
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலமையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தொடக்கி வைத்து முகாமினை பார்வையிட்டார். இம்முகாமில் 15 துறைகள் சார்பில் 46 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு கலைஞர் உரிமைத்தொகை,பட்டா,குடும்ப அட்டை,மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் அளித்தனர். அதனைத்தொடர்ந்து தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் மற்றும் முதியோருக்கு மருத்துவ பெட்டகங்களை உள்ளிட்டவற்றை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் பயனாளிகளுக்கு வழங்கினார்.காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்கொளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் K.P.இராஜன்,ஊராட்சி மன்ற தலைவர் ஹெலன் சிந்தியா சரவணன்,ஒன்றிய அவைத்தலைவர் வி.ஜி.திருமலை,ஒன்றிய கவுன்சிலர் சங்கமித்ரா கருணாகரன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன்,மீனாட்சி மற்றும் துறைச் சார்ந்த அதிகாரிகள்,அரசு ஊழியர்கள் கழக நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
Next Story