பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கிய தமிழக வெற்றிக் கழகம்

X
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தெற்கு ஒன்றியம் சுத்தமல்லி சத்யா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் கொடை விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வெயிலின் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் குளிர்பானம் வழங்கப்பட்டது. இதில் மானூர் தெற்கு ஒன்றிய தவெக நிர்வாகி மசூத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

