ஆவணி அவிட்டம்- விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி.

ஆவணி அவிட்டம்- விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி.
ஆவணி அவிட்டம்- விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி, பூணுால் மாற்றுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பூணுால் மாற்றுவதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Next Story