நெல் கொள்முதல் மையங்களை திறக்க கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சோழவந்தான் வடகரை கண்மாய் தென்கரை கண்மாய் முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் மூலம் அறுவடை செய்த நெல்களை கொள்முதல் செய்ய சோழவந்தான் ஊத்துக்குளி முள்ளி பள்ளம் மன்னாடிமங்கலம்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் நெல்லை கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டது ஆனால் விவசாயிகள் கிணற்று பாசனம் மூலமும் தாமதமாக நடவு செய்த விவசாயிகளும் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சோழவந்தான் பகுதிகளில் நெல் அறுவடை செய்து வருகின்றனர் நெல் கொள்முதல் நிலையத்தை அரசு மூடி விட்டதால் தற்போது அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை அலங்காநல்லூர் அருகே உள்ள வைரவநத்தம் கிராமத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது . சோழவந்தானிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் உள்ள அலங்காநல்லூர் பகுதிக்கு நெல் மூட்டைகளை கொண்டு செல்வதால் கூடுதல் செலவாகிறது. விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையங்களை இன்னும் சில நாட்கள் நீட்டித்து அனுமதி வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



