சாத்தூர் இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடித்மாத கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது*

சாத்தூர் இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடித்மாத கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது*
X
சாத்தூர் இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடித்மாத கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது*
சாத்தூர் இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடித்மாத கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவை காண தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக் கான பக்தர்கள் பாதயாத்திரை யாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது மேலும் இன்று முதல் ஒவ்வொரு நாளும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் சப்பரத்தில் வீதி உலா நடைபெறும். மேலும் இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவின் முக்கிய நிகழ்வான இருக்கன்குடி யில் அம்மன் ரிஷப வாகனத்தில் வைப்பாற்றில் இறங்கி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மேலும் இந்த திருவிழாவை காண தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். மேலும் கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை அறங்காவலர் குழு தலைவர் பதவியில் இருந்து நீக்க கோரி இருக்கன்குடி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட இருக்கன்குடி பொதுமக்கள் கோவில் வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் போலீசார். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் மேலும் இன்று ஆடி கடைசி வெள்ளி திருவிழாவில் கொடியேற்ற நிகழ்வு என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் கோயில் வளாகத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் பூஜை பொருட்கள் வாங்க முடியாமல் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர் மேலும் கோயில் வளாகத்தில் கடைகளை அடைத்து இருக்கன்குடி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story