வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி

வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி
X
வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலியானார் வெள்ளகோவில் காவல்துறை விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பேரையூர் அருகே உள்ள சேந்தகோட்டையை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 36). இவர், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே எல்லைக்காட்டு வலசு பிரிவில் உள்ள தனியார் நூல் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர், தனது நண்பர்களுடன் மில்லுக்கு அருகே செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் குளிக்க சென்றார். அப்போது திடீரென அவர் தண்ணீரில் மூழ்கினார். உடனே, அவருடைய நண்பர்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ராமமூர்த்தியை தண்ணீர் இழுத்து சென்றது. இது குறித்து காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து ராமமூர்த்தியை தேடினர். சிறிதுநேரத்தில் ராமமூர்த்தியை பிணமாக மீட்டனர். தண்ணீரில் மூழ்கிய அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய உடல், பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story