சந்தோஷி அம்மன் கோவில் திருவிழா

குமாரபாளையம் சந்தோஷி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
குமாரபாளையம் சந்தோஷி அம்மன் கோவில் திருவிழா கணபதி பூஜையுடன் நேற்றுமுன்தினம்  துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள தாளங்கள் முழங்க, பெண் பக்தர்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு ஆடையணிந்தவாறு தீர்தக்குடங்கள் எடுத்து வந்தனர். மலர்களால், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சந்தோஷி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு வந்தார். இன்று காலை முதல் பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மஞ்சள், பன்னீர், திருமஞ்சனம், திருநீறு, குங்குமம், பால், தயிர்  உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன. அம்மன் பிறந்த நாளில்   ரக்ஷாபந்தன் கொண்டாடப்பட்டு வருவதால், பக்தர்கள் தங்கள் சகோதர, சகோதரிகளுக்கு ரக்ஷாபந்தன் கயிறு கட்டிக்கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. அம்மன் புகழ் பாடும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சகிலா அம்மையார் உள்ளிட்ட பலர் செய்தனர்.
Next Story