கோவை: ஓட்டல்களில் பிரியாணி விலை உயர்வு

X
சீரகசம்பா அரிசி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்ததால், கோவை ஓட்டல்களில் பிரியாணி விலை திடீரென உயர்ந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் விளைச்சல் குறைவு மற்றும் வெள்ள பாதிப்பால் அரிசி வரத்து குறைந்ததால், கிலோ ரூ.90–110 இருந்த விலை தற்போது ரூ.200–210 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பிரியாணி விலை ஒரு பிளேட்டுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளதாக ஓட்டல்களிலும் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
Next Story

