தேரடி விநாயகருக்கு சந்தன காப்பு விழா

தேரடி விநாயகருக்கு சந்தன காப்பு விழா
X
விழா
திருக்கோவிலுார், கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் 40ம் ஆண்டு விழா, நேற்று முன்தினம் மாலை துவங்கியது. முதல் நாள் விநாயகருக்கு மகா அபிஷேகமும், பழம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகா அபிஷேகம், சோடசோபோவுபசார தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக மாலை 6:00 மணிக்கு, விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, நாதஸ்வர தவில் இன்னிசை கச்சேரி, தொடர்ந்து உற்சவர் விநாயகர் வீதி உலா நடந்தது.
Next Story