தக்கோலம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

தக்கோலம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X
தக்கோலம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தக்கோலத்தை அடுத்த நகரிக்குப்பம் ஏரிக்கரை அருகே உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக தக்கோலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் ராஜேஷ் (வயது 25) என்பது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story