சேலம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

X
சேலம் மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சம்பவத்தன்று இவர் வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை உள்பட உடலில் பல இடங்களில் பலத்த அடிபட்டது. குடும்பத்தினர் முதியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

