கந்தசாமி கண்டர் கல்லூரியில் போதைப் பொருள் இல்லாத மாநிலம் குறித்து விழிப்புணர்வு.

X
Paramathi Velur King 24x7 |11 Aug 2025 6:46 PM ISTகந்தசாமி கண்டர் கல்லூரியில் போதைப் பொருள் இல்லாத மாநிலம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,ஆகஸ்ட். 11: பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பரமத்தி வேலூர் காவல் துறை துணைகண்கானிப்பாளர் சங்கீதா,உதவி ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகளிடயே போதை பொருள் குறித்தம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் IQAC ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், விமானப் படை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம்,போதைப் பொருள் தடுப்பு குழு, தேசிய மாணவர் படை,மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
