பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு.

X
Paramathi Velur King 24x7 |11 Aug 2025 7:18 PM ISTபரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
பரமத்திவேலூர்,ஆகஸ்ட்.11: பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகை யான பூக்கள் பயிர் செய்யப் பட்டுள்ளன. இங்கு விளை யும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக் கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப் பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள் பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக் களை ஏலம் எடுக்க வருகின்ற னர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.300-க்கும், பச்சை முல்லை பூ கிலோ ரூ.500-க்கும், வெள்ளை முல்லை பூகிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ. 250-க்கும், கனகாம் பரம் கிலோ ரூ. 400-க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.150-க்கும், ஜாதிமல்லி பூ கிலோ ரூ.550-க்கும், காக்கட்டான்பூகிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.800-க் கும்.சம்பங்கி கிலோ ரூ. 280-க் கும்.அரளிகிலோ ரூ.240-க்கும், ரோஜா கிலோ ரூ.400-க்கும் பச்சை முல்லை பூ கிலோ ரூ 800-க்கும். முல்லை பூகிலோ ரூ.700-க்கும். செவ்வந்திப்பூ ரூ.350-க்கும், | கனகாம்பரம் கிலோ ரூ.700-க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.250-க்கும், ஜாதிமல்லி பூ கிலோ ரூ.850-க்கும், காக்கட் டான் பூ கிலோ ரூ.700-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்ததால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
