பணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் : டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

பணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் : டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
X
பணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் : கோவில்பட்டியில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
தமிழ்நாட்டில் ஏழை, எளியோரின் வறுமைதான் இரட்டிப்பாகியுள்ளது. வருமானம் இரட்டிப்பாகவில்லை என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சியில் இம்மாதம் 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர் பகுதிகளில் ஆக. 21இல் நான்காம் கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறேன். இதுவரையிலான சுற்றுப்பயணத்தின்போது, அனைத்துக் கிராமங்களிலும் 100 நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படாததே மக்கள் பிரச்னையாக உள்ளதெனத் தெரியவந்தது. எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி எனது தலைமையில் செப். 6இல் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சட்டவிரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளை முடக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசுத் தொழிலில் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் ஏதுமில்லை. மொழி மட்டுமே கல்விக் கொள்கையல்ல. எங்கள் கட்சியை கிராமந்தோறும் வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 7ஆவது மாநில மாநாடு டிசம்பர் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறும். அப்போதுதான், 2026 தேர்தல் தொடர்பாக எங்களது வியூகத்தை அறிவிக்க முடியும். மக்களுக்கு நன்மைபயக்கும் வகையில் கூட்டணி அமைப்போம். தமிழ்நாட்டில் ஏழை, எளியோரின் வறுமைதான் இரட்டிப்பாகியுள்ளது. வருமானம் இரட்டிப்பாகவில்லை என்றார். மாநிலப் பொருளாளர் செல்லத்துரை, வடக்கு மாவட்டச் செயலர் அதிகுமார், தென்காசி தெற்கு மாவட்டச் செயலர் கிருஷ்ணபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story