ஆண்டிமடத்தில் ஆட்டோ சங்க பேரவை கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு.

ஆண்டிமடத்தில் ஆட்டோ சங்க பேரவை கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு.
X
ஆண்டிமடத்தில் ஆட்டோ சங்க பேரவை கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அரியலூர், ஆக.12- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் பேரவை கூட்டம் ஆர்.பிரபுகுமார் தலைமையில் நடைபெற்றது. சங்கம் சம்மந்தமாக சிஐடியு மாவட்ட செயலாளர் பி.துரைசாமி விளக்கி பேசினார். ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் எ.சத்தியமூர்த்தி, சிபிஎம் செயற்குழ உறுப்பினர் வி.பரமசிவம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சங்க தலைவராக ஆர்.பிரபுகுமார். செயலாளராக எம்.ஆறுமுகம். பொருளாளராக சி.ஆரோக்கியசாமி துணை தலைவராக கே.கலையரசன், துணை செயலாளராக வி.மணிவண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆண்டிமடம் பகுதியில் ஆவணங்கள் இல்லாமல்  ஆட்டோ ஒட்டுபவர் மீது நடவடக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார்கள் ஆன்லைனில் ஆட்டோ ஒட்டுனர் மீது அபராதம் போடுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொடர்ந்து நடைபெற்ற சங்க பேரவை கூட்டத்தில் ஆக.12 முதல் சிஐடியு சங்கத்தோடு இணைத்து செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆட்டோ சங்கர் உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story