சந்தைப்பேட்டை கோவிலில் எட்டாம் பொங்கல் நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள மூப்பனார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் கடந்த 5ஆம் தேதி கொடை விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 12) எட்டாம் பொங்கல் நிகழ்ச்சி கோவிலில் நடைபெற்றது. அப்பொழுது அம்மனுக்கு பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story

